Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

ஐக்கிய அரபு நாடுகளில் கனமழை 10 விமான சேவை ரத்து - பயணிகள் அவதி

SAMYUKTHA17-04-2024
ஐக்கிய அரபு நாடுகளில் கனமழை 10 விமான சேவை ரத்து - பயணிகள் அவதி

ஐக்கிய அரபு நாடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, துபாய், சார்ஜா, குவைத் நாடுகளுக்கு செல்ல வேண்டிய 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா போன்ற நாடுகளில், நேற்று முதல் கனமழை பெய்து, மோசமான வானிலை நிலவி வருகிறது. இதனால் சென்னையில் இருந்து துபாய், சார்ஜா, குவைத் செல்லும் விமானங்களும், அந்த நாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் நேற்று இரவு துபாயில் இருந்து சென்னை வந்து, மீண்டும் துபாய் செல்ல வேண்டிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் இன்று அதிகாலை துபாயில் இருந்து, சென்னைக்கு வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ், துபாயில் இருந்து சென்னை வந்து, அதிகாலை துபாய் புறப்பட்டு செல்ல வேண்டிய பிளை துபாய் ஏர்லைன்ஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. மேலும் நேற்று இரவு சென்னையில் இருந்து குவைத் சென்று, இன்று அதிகாலை சென்னை திரும்பி வர வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சார்ஜாவில் இருந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வர வேண்டிய ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ், அதிகாலை 4.30 மணிக்கு சென்னையில் இருந்து சார்ஜா செல்ல வேண்டிய ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் விமானமும் ரத்து செய்யப்பட்டன. இவ்வாறு மொத்தம் 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் சென்னையில் இருந்து துபாய், அபுதாபி செல்ல வேண்டிய சில விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்