Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

EVM-VVPAT: இவிஎம்-விவிபேட் வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேட்ட 5 கேள்விகள் என்ன?

PRITHIVIRAJ24-04-2024
EVM-VVPAT: இவிஎம்-விவிபேட் வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேட்ட 5 கேள்விகள் என்ன?

வாக்காளர் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு எந்திரமான விவிபிஏடி எந்திரம் எவ்வாறு இயங்குகிறது, அதன் நுண்கட்டுப்பாட்டுக்கருவி மாற்றக்கூடியதா உள்ளிட்ட 5 கேள்விகளை தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது.

இந்த 5 கேள்விகளுக்கு விளக்கத்துடன் பிற்பகல் 2 மணிக்கு தேர்தல் ஆணையத்தின் தரப்பில் அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலின்போது பதிவான வாக்குகளை எண்ணும்போது, மின்னணு வாக்கு எந்திரத்தில்(EVM) பதிவான வாக்குகளையும், விவிபாட்(VVPAT) எனப்படும் வாக்காளர் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை உறுதி செய்யும் சீட்டு வழங்கும் எந்திரத்தின் கணக்கையும் சரிபார்க்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1616066711_supreme-court-4.avif

சமூக ஆர்வலர்கள் அருண் குமார் அகர்வால் சார்பில் வழக்கறிஞர் நேஹா ரதி சார்பில் இந்த ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கெனவே இதேபோன்ற மனு விசாரனையில் இருக்கிறது.

கடந்த 16ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு விசாரிக்கப்பட்டபோது, “ இந்தியா என்பது மிகப்பெரிய தேசம், இங்கு வாக்குச்சீட்டு முறையில் வாக்கு முறையைக் கொண்டுவந்து வாக்குகளை எண்ணுவது மிகப்பெரிய பணி. ஆதலால், நிர்வாக முறையை கீழ்நோக்கி தள்ளக்கூடாது. தேர்தல் ஆணையம் விவிபேட் எந்தரங்கள், வாக்கு எந்திரங்களை ஹேக்கிங் செய்ய முடியுமா என்று பதில் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் மணிந்தர் சிங் உச்ச நீதிமன்றத்தில் கூறுகையில் “ மின்னணு வாக்கு எந்திரம் பிரத்யேகமானது, இதை ஹேக்கிங் செய்து சேதப்படுத்த முடியாது.ஆனால், மனிதர்கள் தவறு என்பது தவிர்க்க முடியாது” எனத் தெரிவித்திருந்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபங்கர் தத்தா அமர்வில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுதாரர்கள், தேர்தல் ஆணைய வழக்கறிஞர்கள், ஆகியோர் முன், வாக்காளர் வாக்களித்தபின்ஒப்புகைச் சீட்டை சரிபார்க்கும் எந்திரத்தின் மீது சந்தேகம் இருப்பதாகவும், 5 கேள்விகளுக்கு விளக்கம் தேவை என்று தெரிவித்தனர்

  1. நுன்கட்டுப்பாட்டுக் கருவி கன்ட்ரோல் யூனிட்டில் பொருத்தப்பட்டுள்ளதா அல்லது வாக்காளர் வாக்களித்தபின் ஒப்புகைசீட்டு வழங்கும் விவிபேட் எந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளதா.

  2. நுன்கட்டுப்பாட்டுக் கருவி ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?

  3. கட்சிகளுக்கான சின்னங்களை பதிவேற்றும் யூனிட்கள் உள்ளன.

  4. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சேமிப்பதற்கான வரம்பு காலம் 30 நாட்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் தேர்தல் தொடர்பான மனுக்கள் அல்லது மறுவாக்கு எண்ணிக்கை வாய்ப்புகள் இருந்தால் இவிஎம் எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் சேமிக்கப்பட்டுள்ளதா. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 81ன் கீழ் இவிஎம் எந்திரத்தின் பாதுகாப்பு காலம் 45 நாட்கள் என்று கூறுகிறது. உங்கள் அதிகாரியிடம் இருந்து விளக்கம் பெற வேண்டும்.

  5. இவிஎம் எந்திரத்தில் 3 பகுதிகள் உள்ளன. பாலட் யூனிட்(வாக்குப்பதிவு), கன்ட்ரோல் யூனிட்(கட்டுப்பாட்டுகருவி), விவிபேட்(வாக்காளர் ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரம்) இந்த 3 கருவிகளும் ஒரே இடத்தில் ஒன்றாகச் சேமிக்கப்பட்டு, சீல்வைக்கப்பட்டுள்ளதா.

election-commission-of-india-1553760584.jpg

இந்த கேள்விகளுக்கு எங்களுக்கு விளக்கம் தேவைப்படுகிறது. ஆதலால், உங்கள் அதிகாரிகளை பிற்பகல் 2 மணிக்கு நேரில் ஆஜராக உத்தரவிடுகிறோம்” என உத்தரவிட்டனர். இந்த வழக்கில் தொடர்ந்து இரு நாட்கள் விசாரணை நடத்திவிட்டு, தீர்ப்பை கடந்த 18ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்