Logo
Logo

முக்கிய செய்தி:

சினிமா

கமல்ஹாசன் தாய்மாமா சீனிவாசன் மரணம் - உதயநிதி இரங்கல்

AISHWARYA ARUMUGAM23-04-2024
கமல்ஹாசன் தாய்மாமா சீனிவாசன் மரணம் - உதயநிதி இரங்கல்

கமல்ஹாசனின் மாமா சீனிவாசன் தனது 92வது வயதில் காலமானார். கொடைக்கானலில் வசித்து வந்த அவர் அங்கே உயிரிழந்த நிலையில், அவரது உடல் அஞ்சலிக்காக மக்கள் நீதி மய்யத்தில் வைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது. கமல்ஹாசனின் மாமா வாசுவின் இறுதிச்சடங்கில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களும், சில சினிமா பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்திச் சென்றனர்.

நடிகர் கமல் ஹாசன் இரங்கல்: முன்னதாக தனது மாமா வாசுவின் மரணம் குறித்து பதிவிட்ட கமல்ஹாசன் அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதாக தெரிவித்து ட்வீட் ஒன்றையும் பதிவிட்டு இருந்தார் "எனது ஆளுமை உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த ஆருயிர் மாமா சீனிவாசன் இன்று தன்னுடைய 92-வது வயதில் கொடைக்கானலில் காலமானார். புரட்சிகரமான சிந்தனைகளுக்காகவும், துணிச்சலான செயல்களுக்காகவும் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு வீரயுக நாயகனாக திகழ்ந்தவர் வாசு மாமா"

இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவரது உடல் மக்கள் நீதி மய்யம் அலுவலகத்திற்கு இன்றிரவு கொண்டு வரப்படும். நாளை (23-04-24) காலை 10:30 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

உதயநிதி ஸ்டாலின் இரங்கல்: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் - கமல்ஹாசனின் தாய் மாமா சீனிவாசன் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருந்தமுற்றோம். திரையுலகம் - அரசியல் இரண்டிலும் கமல்ஹாசன் அவர்களுக்கு உற்றத் துணையாக திகழ்ந்த பெரியவர் சீனிவாசன் அவர்களின் மறைவு, அவர்களுடைய குடும்பத்தினருக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் - நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.- என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்