Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

பாஜ பணம் பட்டுவாடா கண்டித்து சுயேச்சை வேட்பாளர் தர்ணா - புதுச்சேரியில் பரபரப்பு

SAMYUKTHA18-04-2024
பாஜ பணம் பட்டுவாடா கண்டித்து சுயேச்சை வேட்பாளர் தர்ணா - புதுச்சேரியில் பரபரப்பு

புதுவையில் பாஜ வாக்காளர்களுக்கு பணம் தருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ இன்று நடுரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் 19 சுயேச்சைகள் உள்பட மொத்தம் 26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனிடையே பாஜ வாக்காளர்களுக்கு பணம் தருவதாகவும், பணம் விநியோகிப்பவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், இத்தேர்தலை ரத்து செய்யக்கோரியும் சுயேச்சை வேட்பாளரான மாஸ்கோ ஒதியம்பட்டு 4 முனை சந்திப்பில் நடுரோட்டில் இன்று தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது புதுச்சேரி தேர்தல் துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர். புதுவையில் தேர்தல் பாதுகாப்புக்காக 144 தடை நேற்று மாலை முதல் அமலில் உள்ள நிலையில் சுயேச்சை வேட்பாளர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்து வந்த வில்லியனூர் போலீசார், மாஸ்கோ உள்ளிட்ட அனைவரையும் உடனே அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ஏற்கனவே இதே குற்றச்சாட்டை முன்வைத்து அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன், நேற்று மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்