Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

காவி நிறத்தில் டிடி லேகோ – எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

PRIYA19-04-2024
காவி நிறத்தில் டிடி லேகோ – எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, இந்தி செய்தி சேனலான ‘டிடி நியூஸ்’ –ன் லோகோ நிறத்தை சிவப்பில் இருந்து ஆரஞ்சு நிறத்துக்கு மாற்றி உள்ளது. இதனை காவிமயமாக்கல் எனக் கூறி எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த மாற்றம் குறித்து கடந்த 16ம் தேதி சமூக வலைதளங்களில் அறிவிக்கப்பட்டது. இது பற்றி பிரசார் பாரதி, சி.இ.ஓ கவுரவ் திவேதி பேசுகையில், ‘‘அந்த நிறம் ஆரஞ்ச். 6-7 மாதங்களுக்கு முன்னர் டிடி இந்தியாவின் (ஆங்கில செய்தி சேனல்) லோகோ நிறம் ஜி20 மாநாட்டுக்கு முன்னர் இதே நிறத்துக்கு மாற்றப்பட்டது. ஒரு குழுமத்தில் உள்ள இரண்டு செய்தி சேனல்கள் தற்போது ஒரே வண்ணத்தில் கண்ணுக்கு அழகாக தோன்றும்.”, என்றார்.

பொழுதுபோக்கு மற்றும் செய்தி நிகழ்ச்சிகளை ஆங்கிலம், இந்தியில் ஒளிபரப்பும் டிடி நேசனல் சேனல், கடந்த ஆண்டு காவி மற்றும் நீல நிறத்துக்கு மாற்றப்பட்டது என்பதையும் அவர் குறிப்பிட்டார். லோகோ நிறம் மட்டுமல்லாமல் உபகரணங்கள் மற்றும் ஸ்டுடியோவையும் மாற்றி அமைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த பல தசாப்தங்களில் பல முறை தூர்தர்ஷன் லோகோ நிற காம்பினேசன் மாற்றப்பட்டு இருப்பதாக கூறினார். பிறவற்றில் இருந்து மாறி தெரிவதற்காக இது போன்ற அழகுணர்வுடன் மாற்றங்கள் செய்வது அவசிமாகிறது என திவேதி தெரிவித்தார்.

தூர்தர்ஷனுக்காக 1976ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதன் முறையாக பச்சை நிற பினபுலத்தில் ஆரஞ்சு நிற லோகோ இருப்பதை பிரதமர் இந்திரா காந்தி தேர்ந்தெடுத்தார். பண்டிட் ரவி சங்கர் மற்றும் உஸ்தாத் அலி அகமது ஹுசைன் கானின் பின்னணி இசையும் சேர்க்கப்பட்டது.

காவி நிறம் பாஜகவோடு சேர்த்து பேசப்படுவதைப் பற்றி நாங்கள் எந்த இடத்திலும் கருத்தில் கொள்ளவில்லை என்றும் ஆரங்ச், மஞ்சள் மற்றம் கருப்பு நிறங்களை எளிதில் நினைவு கொள்ள முடியும் என்ற அறிவியல் அடிப்படையில் மட்டுமே மாற்றம் கொண்டு வரப்பட்டதாக திவேதி தெரிவித்தார்.

ஆனால், இந்த மாற்றத்துக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரசார் பாரதியின் முன்னாள் சிஇஓவான ஜவஹர் சிர்கார், தற்போது திரிணாமூல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். அவர் இந்த மாற்றத்தை காவிமயமாக்கல் என்றும் ‘பிரசார் பாரதி‘ நிறுவனம் ‘பிரச்சார் பாரதியாக’ மாறி விட்டது என சாடி உள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள மாநிலங்களவை மெரூன், சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டு இருப்பதாகக் கூறினார். மக்களவை, மாநிலங்களவையின் பணியாளர்கள் அணியும் உடையின் நிறமும் காவியாக மற்றப்பட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். ஜி20 மாநாட்டு லோகோவிலும் காவி நிறம் அதிகம் இடம்பெற்றது என்று கூறினார்.

இது கட்சியின் அடையாளத்தையும் நாட்டின் அடையாளத்தையும் ஒன்றாக சேர்ப்பதற்கான முயற்சி என்று சிர்கார் கண்டனம் தெரிவித்தார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்