முக்கிய செய்தி:
தேர்தல் களம்
மக்களவை தேர்தல்: ஆர்வத்துடன் வாக்களித்த முதியவர்கள்
தமிழக முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்ற மக்களவை தேர்தலில், 60 வயதை கடத்த மூத்த வாக்களார்கள் ஆர்வத்துடன் தங்களின் வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், 90 வயதான மூதாட்டி ஒருவரும், 80 வயதான முதியவர் ஒருவரும் மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலியில் வந்து தங்களின் வாக்கை செலுத்தினர்.
நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி ஒருவர் நெல்லை வண்ணாரப்பேட்டையில் இருக்கும் தனது வாக்குச்சாவடிக்கு ஆம்புலன்ஸில் வந்து வாக்கு செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினார். ராமேஸ்வரத்தில் தனது வாக்கை செலுத்த வந்த 65 வயது மூதாட்டி ஒருவரை, அவர் இறந்து விட்டதாக கூறி தேர்தல் அதிகாரிகள் வாக்களிக்க தடை விதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொளுத்தும் வெயிலில் அதி சிரமத்துக்கிடையே வாக்களிக்க வந்த மூதாட்டி அதிகாரிகளின் மறுப்பால் செய்வதறியாமல் வேதனையுடன் திரும்பிச் சென்றார்.
இதேபோல், கோவை சுகுணாபுரம் பகுதியில் வாக்களிக்க வந்த 60 வயது மூதாட்டியை, அவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையெனக் கூறி அதிகாரிகள் வாக்களிக்க மறுப்பு தெரிவித்ததால்.. மூதாட்டி கண்ணீர் விட்டு அழுதபடியே திரும்பி சென்றது சோகத்தை ஏற்படுத்தியது.
உங்கள் கருத்தை தெரிவிக்கவும்
டிரெண்டிங்
மேலும் பார்க்கசெய்திமடலுக்கு சந்தாதராகவும்
உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்