Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

ரூ.1.5 லட்சம் செலவு செய்து வந்த வாக்காளர் பெயர் பட்டியலில் மாயம் - லண்டனில் இருந்து வந்தவர் விரக்தி

SAMYUKTHA19-04-2024
ரூ.1.5 லட்சம் செலவு செய்து வந்த வாக்காளர் பெயர் பட்டியலில் மாயம் - லண்டனில் இருந்து வந்தவர் விரக்தி

லண்டலில் இருந்து வந்த சூளைமேட்டுக்காரரின் பெயர் வாக்காளர் பட்டியலில் காணாமல் போனதால் வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சி அடைந்தார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடந்தது. சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உள்ளிட்ட சிறிய பிரச்னைகள் இருந்தாலும், பெரும்பாலும் வாக்குப்பதிவு தடைபடாமல் நடந்தது. இந்நிலையில் சர்கார் படத்தில் நடிகர் விஜய் வாக்கு செலுத்துவதற்கு பல லட்சம் செலவு செய்து அமெரிக்காவிலிருந்து தமிழகத்திற்கு வருவதை போல சென்னை சூளைமேட்டில் சம்பவம் ஒன்று அரங்கேறியது.

சென்னை சூளைமேட்டை சேர்ந்த பால்ராஜ் (67) என்பவர், பணி நிமித்தமாக லண்டனில் உள்ளார். அவர் தனது வாக்கை பதிவு செய்வதற்காக லண்டனிலிருந்து ரூ.1.5 லட்சம் செலவு செய்து சென்னை வந்துள்ளார். ஆனால் அவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் தெரிவிக்காமல் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து லண்டனிலிருந்து வந்த பால்ராஜ் கூறுகையில், ‘‘எனது ஜனநாயக கடமையை செலுத்துவதற்காக லண்டனிலிருந்து ரூ.1.5 லட்சம் செலவு செய்து சென்னை வந்தேன். ஆனால் வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை. தேர்தல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் கேட்டால் முறையாக பதில் அளிக்காமல் அலைக்கழித்தனர்'' என்று வேதனை தெரிவித்தார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்