Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

பாஜ-காங்கிரசார் இடையே கைகலப்பு - வாக்குச்சாவடிக்குள் மோதிக்கொண்டதால் பரபரப்பு

SAMYUKTHA19-04-2024
பாஜ-காங்கிரசார் இடையே கைகலப்பு - வாக்குச்சாவடிக்குள் மோதிக்கொண்டதால் பரபரப்பு

புதுச்சேரியில் உள்ள வாக்குசாவடியில் பாஜ-காங்கிரஸ் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட வைசியாள் வீதியில் உள்ள சுசிலாபாய் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தள்ளி செட்டித்தெரு சந்திப்பில் பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏஜெண்டுகள் பூத் அமைத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று வாக்குப்பதிவின் போது, வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்களிடம் இரு கட்சியினரும் வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் திடீர் மோதல் ஏற்பட்டது. இதற்கிடையே மறைந்த முன்னாள் எம்.பி. கண்ணன் மகன் விக்னேஷ் காங்கிரஸ் கட்சியின் துண்டு அணிந்து வாக்குச்சாவடிக்குள் வந்தார். அப்போது அங்கிருந்த பாஜவை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் துண்டு அணிந்து எப்படி வரலாம், வாக்கு கேட்டு பிரசாரம் செய்கிறீர்களா? எனக் கேட்ட போது, இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது.

ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுக்க முயன்றும் முடியவில்லை. பின்னர் மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டியடித்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து வாக்குச்சாவடிக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்