Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா - ஐஜேகே பிரமுகர்கள் சிக்கினர்

SAMYUKTHA19-04-2024
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா - ஐஜேகே பிரமுகர்கள் சிக்கினர்

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த ஐஜேகே கட்சியை சேர்ந்த 6 பேர் பறக்கும்படை அதிகாரிகளிடம் சிக்கினர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த புலிவலம் அருகே மன்பரை ரோடு பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதாக நேற்று நள்ளிரவு தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை 1.30 மணிக்கு அங்கு சென்ற பறக்கும் படை அதிகாரிகள், சோதனை நடத்தினர். அப்போது சொகுசு கார் ஒன்றில் பொதுமக்களுக்கு பணம் வினியோகம் செய்து கொண்டிருந்த ஐஜேகே கட்சியை சேர்ந்த கார்த்திக், பிரபு, அண்ணாமலை, தண்டபாணி உள்பட 5 பேரை கையும் களவுமாக பிடித்தனர்.

இதில் பறக்கும் படையினரை கண்டதும் 2 பேர் பணத்தை ரோட்டில் வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் காரில் சோதனை செய்த போது ஐஜேகே வாக்குறுதி புத்தகம் கட்டாகவும், பூத் உறுப்பினர் ரசீது மற்றும் ₹38 ஆயிரம் பணம் இருந்தது தெரியவந்தது. இவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பணத்தை கொண்டு வந்தார்களா என தொடர்ந்து 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே அழகரையை சேர்ந்தவர் அஜித். ஐஜேகே கட்சியை சேர்ந்த இவர், கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ராஜேந்திரத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தருக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களுக்கு நேற்று பணம் பட்டுவாடா செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை பிடித்த பறக்கும் படை அதிகாரிகள் குளித்தலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், ₹60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்