Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

சர்க்கார் பட பாணியில் ஒருவர் வாக்குப்பதிவு -புன்னகையுடன் வீடு திரும்பினார்

SAMYUKTHA19-04-2024
சர்க்கார் பட பாணியில் ஒருவர் வாக்குப்பதிவு -புன்னகையுடன் வீடு திரும்பினார்

பெரம்பூர் வாக்குச்சாவடி மையத்தில் சர்க்கார் பட பாணியில் 49பி பிரிவின்கீழ் வாக்குப்பதிவு செய்ய அதிகாரிகள் ஒருவருக்கு அனுமதி வழங்கினர்.

பெரம்பூர் தீட்டி தோட்டம் 5வது தெருவை சேர்ந்தவர் முகமது ரபிக். இவர், இன்று காலை 9 மணியளவில் அங்குள்ள சிஎஸ்ஐ துவக்க பள்ளியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்களிக்க வந்தார். அங்கிருந்த அதிகாரிகள், 'உங்களது வாக்கு செலுத்தப்பட்டு விட்டது' என்றனர். இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார். தனது வாக்கை வேறு ஒரு நபர் செலுத்தியது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முகமது ரபி முறையிட்டார். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம், தனது வாக்கை வேறு ஒருவர் பதிவிட்ட தகவலை தெரிவித்தார். அவர்கள் தேர்தல் அலுவலர் வெங்கடேசனிடம் முறையிட்டனர். பின்னர் அவரது ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு, 49பி பிரிவின்கீழ் வாக்குப்பதிவு செய்ய அதிகாரிகள் அனுமதி வழங்கினர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விஜய் நடித்த சர்க்கார் படம் வெளியானது. அதில், வெளிநாட்டில் வசிக்கும் தனது வாக்கை மற்றொருவர் விதிகளை மீறி செலுத்தியதால், 49பி பிரிவை பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட வாக்காளர் தனது வாக்கை மீண்டும் பதிவு செய்யலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இந்த படத்தின் மூலம் 49பி சட்டப்பிரிவு மக்களிடையே பிரபலமானது. அதேபாணியில் முகமது ரபிக், தனது வாக்கை மீண்டும் பதிவு செய்து, வெற்றி புன்னகையுடன் வீடு திரும்பினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்