Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது - வாக்கு செலுத்தியபின் கமல்ஹாசன் பேட்டி

SAMYUKTHA19-04-2024
இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது - வாக்கு செலுத்தியபின் கமல்ஹாசன் பேட்டி

இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது என வாக்கு செலுத்திய பின் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பலரும் ஆர்வமாக தங்களது வாக்கினை செலுத்தினர். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் வாக்குப்பதிவு தொடங்குதவற்கு முன்னதாகவே வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். அதன்படி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேனாம்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு காலை 10 மணிக்கு வந்து தன்னுடைய வாக்கை செலுத்தினார். முன்னதாக அங்குள்ள அலுவலரிடம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இயங்குவது குறித்து கேட்டார். பின்னர் நிருபர்களிடம் கமல்ஹாசன் கூறுகையில், இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க. இந்தியாவிற்கு எல்லா தேர்தலும் முக்கியமானது, குறிப்பாக இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது என்றார். மேலும், ‘இப்போதைக்கு சொல்வதற்கு எதுவும் இல்லை. ஏற்கனவே சொல்லியாச்சு’ என ஆங்கிலத்தில் கூறினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்