முக்கிய செய்தி:
அரசியல்
திமுக எம்.எல்.ஏ மீது புதுச்சேரி அமைச்சரின் மனைவி புகார்
தனக்கு சொந்தமான நிலத்தில், திமுக எம்.எல்.ஏ அத்துமீறி சாலை அமைப்பதாக கூறி புதுச்சேரி அமைச்சர் ஒருவரின் மனைவி போலீசில் புகாரளித்துள்ளார்.
புதுச்சேரியில் புதிய அமைச்சராக பதவியேற்றவர் திருமுருகன். இவரின் மனைவியான சுர்ஜிதாவுக்கு காரைக்கால், மண்டபத்தூர் பகுதியில் சொந்தமாக நிலம் ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத்தின் திமுக எம்.எல்.ஏவான நிவேதா முருகன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், புதுப்பேட்டை சந்திரபாடி கிராமங்களுக்கிடையே சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். இந்த பணியானது புதுச்சேரியின் எல்லைக்குள்ளும் அனுமதியின்றி வருவதாக கூறிய சுர்ஜிதா, தனக்கு சொந்தமான நிலத்திலும் சாலை அமைக்கப்படுவதாக கூறி கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் புகாரளித்தார். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட தமிழக அரசின் ஒப்பந்த ஊழியர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உங்கள் கருத்தை தெரிவிக்கவும்
டிரெண்டிங்
மேலும் பார்க்கசெய்திமடலுக்கு சந்தாதராகவும்
உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்