Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

எலான் மஸ்க் இந்திய வருகை திடீர் ஒத்திவைப்பு - குஜராத்தில் ஆலையை அமைக்க ஒன்றிய அரசு நிர்பந்தம்

SAMYUKTHA20-04-2024
எலான் மஸ்க் இந்திய வருகை திடீர் ஒத்திவைப்பு - குஜராத்தில் ஆலையை அமைக்க ஒன்றிய அரசு நிர்பந்தம்

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் இந்திய வருகை திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் டெஸ்லா மின்சார கார் நிறுவனத்தை அமைக்க எலான் மஸ்க் முடிவு செய்திருந்தாகவும் அதனை குஜராத்திற்கு மாற்ற ஒன்றிய அரசு நிர்பந்தம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் அவர் தனது இந்திய பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

உலகத்தில் மிகப்பெரிய மின்சார கார் உற்பத்தி நிறுவனமாக டெஸ்லா விளங்கி வருகிறது. இதன் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் எலான் மஸ்க் இந்தியாவில் 20 மில்லியன் டாலர் அளவிற்கு முதலீடு செய்ய முடிவு செய்திருந்தார். அதன்படி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா அல்லது குஜராத் ஆகிய இடங்களில் மிகப்பெரிய மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தை அமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, அம்பானி நிறுவனத்துடன் இணைந்து மின்சார வாகனங்களை தயாரிக்க எலான் மஸ்க்கை வலியுறுத்தி வந்தன. இந்த பணிகளுக்காக அவர் நாளை இந்தியா வர திட்டமிட்டிருந்தார். ஆனால் அமெரிக்காவில் இருந்து கிளம்புவதற்கு சில மணிநேரத்தில் அவர் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் தளத்தில், ‘டெஸ்லா நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள அதிக பணிச்சுமையின் காரணமாக இந்திய பயணத்தில் தாமதம் ஏற்படுள்ளது. இதனால் இந்தாண்டு பிற்பாதியில் இந்தியாவிற்கு செல்ல முடிவு செய்துள்ளேன்’ என்று அதில் பதிவிட்டுள்ளார். எலான் மஸ்க்கின் இந்திய பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பது பல யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. மேலும், குஜராத்தில் டெஸ்லா மின்சார கார் ஆலையை நிறுவ எலான் மஸ்க் விரும்பவில்லை என்றும், அவர் தமிழ்நாட்டில் ஆலையை அமைக்க முடிவு செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் ஒன்றிய அரசு குஜராத்தில் இந்த வாகன ஆலையை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதால் இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திய தொழில் முனைவோர் சங்க நிர்வாகி ரகுநாதன் கூறுகையில், ‘தமிழ்நாட்டில் டெஸ்லா கார் நிறுவன ஆலையை அமைக்க எலான் மஸ்க் விரும்பி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அதனை குஜராத்திற்கு மாற்றுமாறு அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளன. இதனால்தான் இந்திய பயணத்தை அவர் ரத்து செய்துள்ளார்’ என்று கூறினார். எலான் மஸ்க்கின் இந்திய வருகையை வைத்து மிகப்பெரிய அரசியல் ஆதாயத்தை அடைய பாஜவினர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதன்படி, மிகப்பெரிய மின்சார கார் தொழிற்சாலையை இந்தியாவில் அமைத்து தொழில் துறை வளர்த்தெடுக்க மோடி கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறார் என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் கட்டமைக்க பாஜவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது எலான் மஸ்க்கி வருகை ரத்து செய்யப்பட்டிருப்பதால் பாஜவினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்