Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

தேர்தல் பணி முடிந்து திரும்பிய எஸ்ஐ மயங்கி விழுந்து சாவு - புதுக்கோட்டை அருகே சோகம்

SAMYUKTHA20-04-2024
தேர்தல் பணி முடிந்து திரும்பிய எஸ்ஐ மயங்கி விழுந்து சாவு - புதுக்கோட்டை அருகே சோகம்

தேர்தல் பணியில் ஈடுபட்ட போக்குவரத்து எஸ்.எஸ்.ஐ-க்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு திருமயம் பேருந்து நிலையத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

புதுக்கோட்டை காந்தி நகரை சேர்ந்தவர் சண்முகம்(55). ஆலங்குடி போக்குவரத்து போலீசில் எஸ்.எஸ்.ஐ.யாக பணியாற்றி வந்தார். தற்போது மக்களவை தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும்படையில் பணியில் இருந்த அவர் திருமயம் பகுதியில் கடந்த 15 நாட்களாக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். நேற்று பணி முடிந்து இரவு 11 மணி அளவில் சண்முகம் வீட்டுக்கு செல்ல திருமயம் பஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் பஸ்சில் ஏற முயன்றபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் அவரை திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார்.

இதுகுறித்து திருமயம் போலீசார் விசாரிக்கின்றனர். சண்முகத்துக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்