Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

கோடை காலத்தில் தடையில்லா குடிநீர் வழங்க ஆலோசனை

ESWAR23-04-2024
கோடை காலத்தில் தடையில்லா குடிநீர் வழங்க ஆலோசனை

கோடை காலத்தில் தடையில்லாத குடிநீர் வழங்குவது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில், நகராட்சி முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், மற்றும்12 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள குடிநீர் சீராக வழங்குவது, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் 24 வட்டங்களில் ஏற்பட்ட வறட்சி பாதிப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஏரிகள் மற்றும் குளங்களில் நீர் இருப்பு சற்று குறைய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை சமாளித்து தடையில்லாமல் குடிநீர் வழங்குவது, நிலுவையில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டம் திட்டம், குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்