முக்கிய செய்தி:
தேர்தல் களம்
பிரச்சாரத்தில் தனித்துவம் - உதயநிதிக்கு திமுக புகழாரம்
மக்களவை தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தனித்தன்மை வாய்ந்த பிரசார யுக்தி, தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல் என்று திமுக புகழாரம் சூட்டியுள்ளது.
இது குறித்து அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் மக்களை நேரடியாக சந்தித்ததாகவும்,அவர்களிடமே கேள்விகள் கேட்டுப் பதில்கள் தந்த விதமும், அவருக்கு மிகப்பெரிய புகழையும், தி.மு.க.வுக்கு மிகப்பெரிய ஆதரவையும் பெருக்கியது என்பது உண்மை என்று த ெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 24 நாட்கள், 8 ஆயிரத்து 465 கிலோ மீட்டர் பயணித்து, பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து புதிய யுக்திகளைக் கையாண்டதாக கூறப்பட்டுள்ளது.
இது எடப்பாடி பழனிச்சாமியோ, அண்ணாமலையோ, எல்லா இடங்களுக்கும் செல்லவில்லை என்றும், அவர்கள், சமூக ஊடகங்களில் மட்டுமே பிரசாரப் பணிகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது. எனவே, தேர்தல் பிரச்சாரப் பயணத்தை ஒரு வெற்றிப் பயணமாக நிறைவேற்றி, அனைவரது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்றதாக திமுக புகழாரம் சூட்டியுள்ளது.
உங்கள் கருத்தை தெரிவிக்கவும்
டிரெண்டிங்
மேலும் பார்க்கசெய்திமடலுக்கு சந்தாதராகவும்
உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்