முக்கிய செய்தி:
அரசியல்
திமுகவிற்கு தலைவலி கொடுக்கும் நெல்லை... பெண் கவுன்சிலர் ராஜினாமா...!
நெல்லை மாநகராட்சி 36-வது வார்டு திமுக கவுன்சிலர் சின்னத்தாய் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
ஆன்லைன் மூலம் தனது ராஜினாமா கடிதத்தை மேயர் மற்றும் ஆணையருக்கு அனுப்பி உள்ளார். அதில், தனது வார்டில் குடிநீர் பஞ்சம் தலை விரித்து ஆடுவதாகவும் ஆறு மாதங்களுக்கு முன்பு குஜராத்தை சேர்ந்த நிறுவனத்திற்கு குடிநீர் ஏற்றும் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கும் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டதாகவும் அது முதல் தொடர்ந ்து பிரசினைகளை சந்தித்து வருவதாகவும் கூறியுள்ளார். அதிகாரிகள் மற்றும் தனது சொந்த கட்சியான திமுகவினர் இடையே ஜாதி பாகுபாடு தலைவிரித்து ஆடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒரே பெண் கவுன்சிலர் என்ற நிலையில், நடந்து முடிந்துள்ள தேர்தல் பரப்புரையின் போதும், சொந்த கட்சியினரால் அவமானப்பட்டதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வஹாப் மாமன்ற உறுப்பினர் சின்னத்தாய் மற்றும் அவரது கணவர் கிருஷ்ணன் ஆகியோரை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
உங்கள் கருத்தை தெரிவிக்கவும்
டிரெண்டிங்
மேலும் பார்க்கசெய்திமடலுக்கு சந்தாதராகவும்
உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்