முக்கிய செய்தி:
குற்றம்
பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்
கன்னியாகுமரியில் நீதிமன்றத்தில், பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலைமிரட்டல் விடுத்த விசாரணைக் கைதிகளான தந்தை, மகன்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்னர்.
திருட்டு வழக்கில் கைதாகி நாகர்கோவில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குளச்சலைச் சேர்ந்த ஐயப்பன் மற்றும் அவரது மகன்கள் சிவா, விஜய் ஆகியோரை, காவல் உதவி ஆய்வாளர் முத்துலெட்சுமி தலைமையிலான போலீசார், இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். அப்போது, நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்த உறவினர்களிடம ் பேச முயன்ற 3 பேரையும் முத்துலெட்சுமி தடுத்து நிறுத்தினார். இதனால், ஆத்திரமடைந்த 3 பேரும் முத்துலெட்சுமியை அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து முத்துலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஐயப்பன் மற்றும் அவருடைய மகன்கள் மீது இரணியல் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காவல்துறையில் பணிபுரியும் பெண்காவலகர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
உங்கள் கருத்தை தெரிவிக்கவும்
டிரெண்டிங்
மேலும் பார்க்கசெய்திமடலுக்கு சந்தாதராகவும்
உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்