Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

"ஆம் ஆத்மி" நிர்பந்தத்துக்கு பணிந்தது: டெல்லி திகார் ஜெயிலில், கெஜ்ரிவாலை சந்தித்துப் பேசினார், மனைவி சுனிதா

CHENDUR PANDIAN.K29-04-2024
"ஆம் ஆத்மி" நிர்பந்தத்துக்கு பணிந்தது: டெல்லி திகார் ஜெயிலில், கெஜ்ரிவாலை சந்தித்துப் பேசினார், மனைவி சுனிதா

புதுடெல்லி

டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கும் முதல் அமைச்சர் கெஜ்ரிவாலை சந்தித்து பேசுவதற்கு அவருடைய மனைவி சுனிதாவுக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார்.

மதுபான ஊழல் புகாரில் கைது செய்யப்பட்ட முதல்வர் கெஜ்ரிவால் டெல்லி திகார் ஜெயிலில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருக்கிறார். இன்று திங்கட்கிழமை அவரை சந்தித்து பேசுவதற்காக சிறை நிர்வாகத்திடம் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா நேற்று அனுமதி கேட்டு இருக்கிறார். ஆனால் அவருக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

"மோடி அரசின் உத்தரவின் பேரில் அரவிந்த் கெஜ்ரிவால் உடன் அவருடைய மனைவி சுனிதாவின் சந்திப்பை திகார் சிறை நிர்வாகம் ரத்து செய்து இருக்கிறது. இதன் மூலம் மோடி அரசு நிர்வாகம் மனிதாபிமானமற்ற முறையில் அனைத்து வரம்புகளையும் மீறி நடந்து கொள்கிறது" இன்று ஆம் ஆத்மி கட்சி கூட்டம் சாட்டில் இருந்தது.

ஆனால், மூத்த சிறை அதிகாரி ஒருவரிடம் செய்தியாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்து இருந்தால்.

"டெல்லிஅமைச்சர் அதிஷி இன்று கெஜ்ரிவாலை சந்திக்க இருக்கிறார். பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் நாளை செவ்வாய்க் கிழமை அவரை சந்திக்கிறார். கைதி ஒருவர் சிறைக்குள் வாரம் இருமுறை மட்டுமே பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்படுவார். இதன் அடிப்படையில் சந்திப்பு தேதியை மாற்றிக் கொள்ளும்படி அறிவுறுத்தி இருந்தோம்" என்று அந்த அதிகாரி கூறியிருக்கிறார்.

ஆனால் ஆமாம் கட்சித் தலைவர்கள் இதை ஏற்க மறுத்து விட்டனர். ஜெயில் விதிமுறைகளின்படி கைதி ஒருவரை வாரத்திற்கு இருமுறை பார்வையாளர்கள் சந்திக்கலாம். ஒரே நேரத்தில் இருவர் சந்திக்கவும் அனுமதி உள்ளது. வாரத்திற்கு அதிகபட்சமாக நாலு பேர் சந்திக்கலாம்" என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கணவரை சந்தித்தார்

இந்த நிலையில், இன்று மத்தியானம் சிறையில் கெஜ்ரிவாலை சந்தித்து பேசுவதற்கு அவருடைய மனைவி சுனிதாவுக்கு சிறை நிர்வாகம் அனுமதி வழங்கியது. அதைத்தொடர்ந்து சுனிதா டெல்லி அமைச்சர் அதிஷியுடன் சென்று முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பின் அமைச்சர் அதிஷி தனது சமூக வலைத்தள பதிவில் கோரி இருப்பதாவது:-

" முதல்வர் கெஜ்ரிவால் சிறையில் தன்னை பற்றி கவலைப்படவில்லை. அவருடைய கவலை எல்லாம் 2 கோடி டில்லி மக்களை பற்றி தான். இந்திய சந்திப்பு முழுவதும் டெல்லி அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பற்றிய தகவலை அவர் கேட்டு தெரிந்து கொண்டார். இந்தக் கோடை காலத்தில் பள்ளி குழந்தைகளுக்கு குடிதண்ணீர் தட்டுப்பாடு வராமல் பார்த்துக் கொள்ளும்படி எங்களுக்கு அவர் உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும் டெல்லியில் வசிக்கும் தாய்மார்கள் சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு செய்தி ஒன்றையும் அவர் அனுப்பி இருக்கிறார். விரைவில் சிறையில் இருந்து விடுதலை ஆகி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றுவேன் என்பதுதான் அந்த செய்தியாகும்" ‌.

இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்