Logo
Logo

முக்கிய செய்தி:

குற்றம்

குடிபோதையில் தகராறு செய்ததால் கணவர் அடித்து கொலை - மனைவியிடம் போலீசார் விசாரணை

SAMYUKTHA29-04-2024
குடிபோதையில் தகராறு செய்ததால் கணவர் அடித்து கொலை -  மனைவியிடம் போலீசார் விசாரணை

குடிபோதையில் தகராறு செய்ததால் கணவனை அடித்து கொன்று விட்டதாக உயிரிழந்த நபரின் சகோதரர் அளித்த புகாரின் மீது மனைவியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டைசுப்பிரமணியன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(48). கொத்தனாராக பணியாற்றி வந்த இவர், குடிபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதனால் தினமும் மனைவி ஜெயலட்சுமி மற்றும் மகன் யோகேஷ்(15), மகள் சுஜிதா(12) ஆகியோரிடம் பிரசனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை குடிபோதையில் ஆறுமுகம் தனது மனைவியிடம் தகராறு ெசய்துவிட்டு வெளியே சென்று விட்டார். பிறகு மாலை 3 மணிக்கு மனைவி ஜெயலட்சுமி வீட்டிற்கு வந்து பார்த்த போது, கணவன் வீட்டில் உள்ள டிவி ஸ்டாண்டில் இடித்து கீழே விழுந்து தூங்கி விட்டதாகவும், அருகில் தூங்கி கொண்டிருந்த மகன் மற்றும் மகள் எழுந்து பார்த்த போது, ரத்த அதிகளவில் வெளியாறி இருந்ததால், ரத்தத்தை துணியால் துடைத்துவிட்டு, சம்பவம் குறித்து ஆறுமுகம் சகோதரர் ராமசாமியிடம் மனைவி ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். அதனப்டி ராமசாமி வந்து பார்த்த போது, ஆறுமுகத்தின் தலை மற்றும் உடலில் ரத்த காயங்கள் இருந்ததை கண்டு 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து பார்த்த போது, ஆறுமுகம் ஏற்கனவே இறந்துவிட்டதாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்து சென்றுவிட்டனர். பின்னர் சம்பவம் குறித்து ராமசாமி சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் எனது சகோதரன் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் இறந்து கிடந்தார். எனவே அவரது மனைவியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் ஆறுமுகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேடடை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து உயிரிழந்த ஆறுமுகம் மனைவி ஜெயலட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்